புயல் காற்று

ஏன் எங்களை தீண்டினாய்
யார் உன்னை சீண்டியது
இசையின் ஒலியென நினைத்தேன்
இறைதேடும் பேயாய்மாறியது ஏனோ

பூக்களின் காதலி எனநினைத்தேன்
பூகம்பமாய் மாறியது ஏனோ
புல்லாங்குழலின் கவிதை நீ
பூமியை இசைக்கும்இசையும் நீ

பொறுமையாய் இருந்த பெண்
பொங்கி எழுந்தது ஏனோ
மண்ணை கிளர்வதாய் நினைத்து
மனதை தோண்டியது ஏனோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக