கவிதை

கவிதை
வார்த்தைகளின்
வர்ணஜாலமல்ல
கவிதை

வாழ்க்கையின்
வைர வரிகள்
தான் கவிதை

நான் கவிதை எழுத
கற்றுக் கொண்டதே
அன்பை உணர்ந்த பிறகுதான்

என் தனிமையின்
தவமும் நீயே
தவத்தின் பலனும் நீ
பலனின் பலனும் நீ

என் நிழலும்
எனை விட்டோடும்
ஒரு ராத்திரியில்

ஆனால் எப்போதும்
நீ எனை விலகுவதில்லை
நம் வாழ்க்கை
எப்போதோ எங்கேயோ
பிணைக்கப்பட்ட ஒன்று

நம் வாழ்வின் செழிப்புக்காகவே
நான் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.....

அண்டை வீட்டுக்காரர் அமரர்.பாபுக்காக......

வாழ்க்கையின் இறுதிக் காலம் மரணம் என்பது மாறி, மரணம் எப்போது வேண்டுமானாலும் யாரையும் அழைக்கும் என்ற நிலையில் வாழ்க்கை கழிகிறது!

வழக்கம் போல நேற்றைக்கும் எனை நலம் விசாரித்த உயிர் இன்று காற்றில் கரைந்துவிட்டது (28-01-11 )

அண்டை நாட்டில் உயிர்விட்டு கொண்டிருக்கும் என் சகோதரர்களின் மரணத்தை விட, அண்டை வீட்டுக்காரரின் மரணம் வெகுவாக எனை பாதிக்கிறது!

அப்பாவை "அப்பு" என செல்லமாக அழைக்கும் அவரின் இரு குழந்தைகளும் எனைப்பார்த்து " மாமா அப்புவை எழுப்புங்க எனக்கூறி அழும் போது, நானும் இறந்து மீள்கிறேன்" அந்த ஆஸ்பத்திரி அழுகை சத்தத்தில்!

அவரைப் உயிருடன் இருக்கும் போது சரியாக பார்க்காத பார்வை இறந்த அவரது உடலின் மீது மையம் கொண்டுள்ளது!

அஞ்சலி செலுத்திவிட்டு, அவ்விடம் அகன்ற பின்னரும் மனம் தனியொரு இருட்டறையில் ஒளிந்துக்கொள்கிறது!

-வாழ்கையின் பாதையில் இருந்து மிக சீக்கிரம் ஓய்வு பெற்று, மரணமென்னும் மாயையில் கலந்த அண்டை வீட்டுக்காரர் அமரர்.பாபுக்காக........

நினைவுகள்

என்னுடைய முதல் கவிதை இது, என்னுடைய குரு ஒளிப்பதிவாளர்  திரு.செழியன் சார், ஆனந்த விகடன் இதழில் எழுதி வந்த கவிதைகளை  படிச்சு தான் நான் கவிதை எழுத கத்துகிட்டேன்.

செழியன் சார் என்னுடைய ஆஸ்தான குரு அவோரடா எழுத்துக்கள் தான் என்னையும் எதோ எழுத வைத்தது.

இந்த நினைவுகள் கவிதையும் அவர் எழுதிய கவிதையின் சாயல் தான் இதில் இருக்கும் வலிகளும் உணர்வுகளும் என்னுடையது என்றால்  90% வார்த்தைகள் அவருடையது தான்... அவருக்கு என் பரிசுத்த நன்றிகள் சொல்ல நான் கடமைபட்டிருக்கேன்..


சூரியன் இல்லாத அறையில்
நாம் சந்தித்தோம் முதன் முதலாய்
நீலக்குழல் விளக்குகள் படபடத்து இமைக்க
சுவர் கடிகாரம் ஏழுமுறை அதிர்ந்து ஓய்ந்தது
அப்போது

எழுந்து செல்கின்றனர் சிலர்
வந்து அமர்கின்றனர் சிலர்
எழுந்து செல்பர்களில் நீயும்
வந்து அமர்பவர்களில் நானும் ...

சிறிய  அந்த நுழைவில்
நாம் ஒருவரை ஒருவர் கடக்கும் போது
உன்  கண்ணில் நானும்
என் கண்ணில் நீயும் 
மிதந்து வெளியேறினோம்

அது ஒரு அரசுக்கலை கல்லூரி
எங்கள் வகுப்பு  மேல் தளத்தில் இருந்தது
ஆரம்ப  வகுப்பின் முதல் மாதங்கள்
பின் மாலைப்பொழுது உன் வகுப்பு முடிவதும்
என் வகுப்பு துவங்குவதுமாக
முடிந்து  துவங்கும் கணங்களின்
இடைவெளியில் மலரும் நம் காலம்

சன்னலோர இருக்கையில்
ஐந்தாம் என்னிட்ட இருக்கை நமது
நீ எழுந்த இருக்கையில் வந்து அமர்கிறேன் நான்
இருக்கையின் வலப்புற இடப்புற கம்பிகளில்
உன் கைபட்ட சுவடோவியம் ஒளிர்கின்றது

ஒரு நாள்
வகுப்பு நேரத்திற்கு முன்பே வருகிறேன்  நான்
அறையின் மூலையில் உள்ள இருக்கையில்
அமர்ந்திருக்கிறாய்... காத்திருக்கிறேன்

பக்கம் மாற்றும் போது
எனை பார்த்துவிடுகிறாய்
பதட்டத்துடன்  கை கடிகாரம் பார்க்கிறாய்
நான் முன்னதாக வந்துணர்ந்து புன்னகைக்கிறாய்

பின் உன் விரல்கள்
முன்னிலும் வேகமாய் இயங்க
கடிகார முட்கள் எழுப்பும் மணியோசை
மனசுக்குள் சொட்டு சொட்டாய் தெறிக்கும்  மழை

கடிகாரத்தின் ஏழு மணியதிர்வுகள்
நீ புத்தகம் மூடி விடுகிறாய்
சப்த மழையின் ஊடாக
என் முன்னே நடந்து வந்து
பின்  எனை  கடக்கிறாய்
ஓரு பிரிவே சந்திப்பாக நிகழ்வது
நமக்கு மட்டும்தான்

நான் தாமதமாக வரும் நாட்களில்
படிக்கட்டுகளில் நிகழும் பிரிவும் சந்திப்போம்
குறுகலான அந்து படிக்கட்டுகளில்
நான் ஏற வரும்போதெல்லாம்
நீ இறங்கி வருகிறாய்

சிலமுறை நான்
பின்னிறங்கி வழிவிடுகிறேன்
சில  முறை நீ மேலேயே நிற்கிறாய்

ஒருமுறை வேகமாக வந்ததில்
படிக்கட்டின் நடுவில் இருக்கிறோம் இருவரும்
திரும்பி செல்வது இயலாது பார்த்து  நின்றுவிடுகிறோம்

நம் இடையே மூன்று படிக்கட்டுகள்
பேசலாம் என தோன்றும் தருணம்
தலை கவிழ்ந்து மெதுவாக முதற்படியில் இறங்குகிறாய்
முகம் நோக்கும் திரனில்லை இருவருக்கும்

நான் இடப்புறம் ஒதுங்கிகிறேன்
நீ சுவரில் ஒளிவது போல வலப்புறம் ஒதுங்குகிறாய்
என் உடம்பே இதயமாக துடிக்கிறது

இரண்டாவது  படியில் இறங்குகிறாய்
குனிந்த என் பார்வை புலத்தில்  உன் வளைக்கரம்
சுற்றிய புத்தகத்துடன் இறங்குகிறாய்

இருவரும்  இப்போது ஒரே படியில்
மெல்லிய இடைவெளி
ஆடை உரசிவிடக்கூடதென்ற  கவனம் நமக்கு 
உறைந்து மீள்வதை போல
ஒரு கணம் நான் பேச நினைத்த
வார்த்தைகளையெல்லாம்
எடுத்து செல்வதை போல
அன்றைய  பாடம் நடத்திய தாளுடன்
வெளியேறுகிறாய்
வெற்று தாளுடன் உள் நுழைகிறேன் நான்

இரண்டாண்டுகள்  இப்படியாக கழிகின்றன

ஒரு நாள்
வேகமாக எழுதிக்கொண்டிருக்கிறாய் நீ
கடிகாரத்தின் மணியதிர்வுகள்
வழக்கமான் அதே  புன்னகையுடன்
எனை நீ கடக்கிறாய் பின்பாயிரம்
மரங்கொத்திக்கள் சுவர் துளைப்பது போல
வெற்று சப்தங்களாக நிறையும் மனது
ஒரு நாள் நம் இருக்கையில்
நீ மறந்து விட்டு போன உன் கை கடிகாரம்
அழைக்கலாம் என நினைக்கும் தருணம்
நீ பின் நிற்கிறாய். 

மரங்கொத்திக்கள் பறந்து மறைய
மழை பெய்யும்  அறை
நம் கண்கள் பேசிக்கொண்டிருக்க
உன் கடிகார மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது
எடுக்க நீளும் உன் மணிக்கரத்தில்
கடிகாரத்தின் நினைவாய் ஒரு வெள்ளை வளையம்

என் வாழ் நாட்களையெல்லாம்
எடுத்து செல்வதை போல
காலம் அணிந்து விடை பெறுகிறாய்
உன் குரலின் இசையாய் நிறையும் மனதும் அறையும்

தேர்வுகள் வருகின்றன

தேர்வுக்கு செல்லும் குழுவை
நிழற்ப்படம் எடுக்கும் சம்பிரதாயம்
பத்து  முகங்கள் நூறு விரல்கலென
இந்த மூலையில் நீ 
மறு மூலையில் நான்
உன்னையே நினைத்திருக்கிறேன்
நினைத்த ஒரு கணம்
நிழல் படமாய் உரையட்டுமே என

நாம் வகுப்புகள் அன்றுடன் முடிந்தன
தேர்வு அறையின் பிரதான வராண்டாவில் சந்தித்தோம் 
உன் தோழிகளின் பின்னால் ஒளிந்து
ஒரு புன்னகையை அனுப்புகிறாய்

தேர்வுக்கு முந்தைய பெரு மழை சப்தம்
பின்பு நிகழ்ந்ததெல்லாம் வெறும்  மௌனம்
நம் இருக்கை உனக்காகிறது
எதிரிலிருப்பது  எனக்கு

எழுதி முடித்தவுடன் நம்
பார்வைகள் பேசிக்கொள்கின்றன
எனினும் இத்தனை காலமாக
நம்மிடையே பேசிக்கொள்ள
ஒரு வார்த்தை ஒரு அட்சரம் கூட இல்லை...
ஒருவித வலிகளுடன் அனைவரும பிரிகிறோம்

தேர்வு  முடிவு வந்த நாளில்.......
நீ வரக்கூடுமென கல்லூரி வருகிறேன்
நம் பெயர் ஒட்டப்பட்ட தாள் சுவர் ஆடிக்கொண்டிருக்கிறது
அனால் இன்னும் நீ வரவில்லை...
உனக்காக நாம் இன்னும் அங்கேயே காத்துக்கொண்டிருக்கிறேன்.....

______ ஆகிய நான்...

கவிதைக்கும்
காதலுண்டு
காதலுக்கும்
கதையுண்டு

கண்ணாடி
முன்னின்று
திரும்புகிறேன்
என் கதைக்கு....

வண்ணத்துப்பூச்சி
வட்டமிடும் வாசம்
கொண்டவள் நீ

பட்டுப்பூச்சியும்
நூலெடுக்க உன் 
கூந்தலில்
ரிங்காரமிடும்

சுட்டெரிக்கும்
சூரியனும்  சுகமாய்
ஓய்வெடுக்கும்
கண்கள் உனது

நட்சத்திரப்பட்டலம்
இறங்கிவந்து அணிசேர்த்த
பல்வரிசை உனது

வெண்ணிலவும்
கடன் கேட்கும்
பிரகாசம்
உனது முகத்தில்

இறைவனும் சற்றே
இடறிவிழும்
இடையழகை
கொண்டவள்  நீ

காதலெனும் போதையில்
கவிஞ்சனாய் மாறிய
இளவட்டங்களின்
இசைபாட்டில் சற்றே
இசைந்துவிட்டேன்  நான்

காதலும் களவியும்
வேறில்லை என்றவன்
காமுற்றுக்கிடந்த என்னை
கால்வாயில்
கதரவிட்டுசென்றான்

கண்மூடித்திறக்கையில்
கண்ணாமூச்சி ஆட்டம்தானடி
காதலென கூறிமறைந்தனந்த
கயவன்

விட்டில்ப்பூச்சிக்கு
வீட்டில் இடமில்லையென
விரட்டியடித்தன
வீட்டுச்சொந்தங்கள்

தீயில் எரிந்த
திரைச்சீலையின்
தீட்டாய் திரும்பி நடந்தேன் 

இலையுதிர்க்காலத்தில்
உதிர்ந்த
இலையாய் கேட்பாரற்று
கிடந்தேன்

வாசமிழந்து
காயும் தருவாயில்
வண்டுகள் மீண்டும்
எனை வட்டமிட்டன

வசந்தகால வண்டை போல
அவை மீண்டும் மீண்டும்
என்னிடத்தில் வந்தன

மனத்தால் இறந்த
எனை பணத்தால்
சிறையிட்டனர் சிலர்

நரம்பறுந்த வீணையை
நார்க்கொண்டு
மீட்டிக்கொண்டது 
சில நரிக்கூட்டம்

காதலெனும்
கால்வாயில்
கயவனை நம்பி
கால்வைத்த
பாவத்தால்

கண்டவனிடம்
கரைந்துபோகும்
சிலமணி நேரத்துக் காதலி
நான் இன்று

மும்பை எனும்
கான்கிரிட் வனத்தில்
மங்கிய ஒளியில்
விலைப்போய்க்கொண்டிருக்கும்
'பல' ராவனன்களின்
சீதை நான்...




   

 


"பத்மா"னந்தர்...!

காதலெனும் 
ஊடல் 
பருவமெய்தி 
காமமெனும் 
கூடல் 
மூப்பெய்தி வந்தவன்
நான்
மண்ணில் 
பிறக்கையிலே
பாதையை தொலைத்தவன்  
நான்

பால்யத்தில் 
பாசக்கரனாகவும் 
பருவத்தில்
பாவக்கரனாகவும் 
பைத்தியக்கரனாகவும்
உரு மாறியவன்
நான் 

காதலில் கயவன்
நான் 
களவியில் கடன்காரன் 
நான்

துணைத்தேடலில் 
துவண்டுபோனவன் 
நான் 
துனைவாழ்வில் 
தூர்ந்துபோனவன் 
நான் 

தகப்பநென்ற ஸ்தானமும்
தானமாய் பெற்றவன் 
நான் 

மழலையை மார்பில் 
அணைக்க மறந்து 
மண்ணில் தவிக்க விட்டவன்
நான் 

குழைந்தைதனம் மாறியதும் 
என் குமாரர்கள் 
குடும்பஸ்தர்கலாவதை 
கண்டு வெகுண்டவன் 
நான்

மனையாளின் மரணத்தால்
மாற்றான் விட்டு மல்லிகையை 
ம(ன)ணந்தவன் 
நான் 

புருசலட்சனமாய் வந்த 
பூக்கரானுக்கு 
மல்லிகையை மாற்றியவன்
நான் 

அன்பு செலுத்தப்படுபவர்களில் 
நீயும் ஒருவனாய் இருக்கலாம் 
ஆனால் நிச்சயம் 
வெருக்கபடுபவன் தான் 
நான் 

இலையுதிர்க்கால 
கிளையின் 
பழுத்த இலை நான்

முற்றும் துறந்து
வாழ கடமைப்பட்டவன் 
நான் 

வாழ்கையின் 
கடைசி காலத்தில் 
மாற்றம் மருகி 
தயங்கி வந்தது என் வாசலில் 

இன்று நான்...
பாவப்பட்ட நான் 
பாவம் தீர்ற்கும் 
புண்ணியவான் 

பாவப்பட்டவர்கள் 
எனை நாடி வருகின்றனர் 
பரமானந்தம் கிடைக்குமென்று

ஆதாமின் அன்பின் 
பயனாய் வந்தவர்கள் 
என் கால்களில் கிடக்கிறார்கள் 

ஆட்சியாளர்களும் 
ஆசிர்வாதம் வேண்டி 
என் ஆசிரமத்தில் நிற்கிறார்கள் 

ஆட்டி வைப்பவர்களில் 
ஆதவன் 
நான் 

வங்கியில் இருப்பு 
வீட்டில் கருப்பு 
என வாழும் சுகவாசி 
நான் 

"பத்மா"னந்தர்... என்பது எனது திருப்பெயர்
காவி கட்டிய கடவுள்  என்பது எனது பட்டப்பெயர்...!

வாழ்க்கை


பிறப்பின் வேரில் நிற்கும் போது மரணம் புரியவில்லை,

மரணத்தின் விளிம்பில் நிற்கும் போது பிறப்பின் தத்துவம் புறிகிறத,

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைபட்ட வாழ்க்கையில் விருட்சமாய் வளர ஆசைப்பட்ட விதை நான்,

மரமாய் மாற மண்ணில் முட்டி மோதி வெளியே வரும்போதெல்லாம்,

பூச்சிகள் எல்லாம் ஒண்டு கூடி என்னை அரித்தன,

இன்று பக்குவம் என்னும் பூச்சிகொல்லி மருந்துடன் நிற்கிறேன்,

ஆனால் விதை விதைக்கும் காலம் முடிந்து....

விருட்சத்தின் வீழ்ச்சி காலம் தொடங்கிவிட்டது............


-- சூரியா