பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தோழா நீ துயிலுறங்க
ரோஜா படுக்கையை தர ஆசை தான்
ஆனால் அதில் முட்கள் இருக்கும் என்பதால்
அதனை மறுத்துவிடுகிறேன்
நீ முகம் கழுவ
மேகத்தை உருக்கி
மழயை நீராய் தரத்தான் நினைத்தேன்
ஆனால் மண்ணின் மீது இறக்கமேற்பட்டதால்
அதனையும் மறுத்து விடுகிறேன்
ஏழு அதிசயங்களின்
ஏழு வர்ணம் தொட்டு
உனக்காய் ஒரு அதிசயமாய்
வரைந்து தருகிறேன் ஒரு கவிதையை
என்னுயிர் நண்பனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சுதந்திர இந்தியா

ஆகத்து 14 நள்ளிரவு
கருப்பு பயணம் கண்ணுக்குள்
ஏதோவொரு பாதை தெரிய
நடந்தேன் அதன் போக்கில்

என் பயணம்
என் தேசத்தை சுற்றியது
ஒவ்வொரு மாநிலமாய்
ஒவ்வொரு ஊராய்

எத்தனை வேற்றுமை ?
என் பாரத நாட்டில்!
என் செங்குருதி பீரிட்டு
சிவப்பு வண்ணம் தெளித்தது,

அதனை ஒரு தூரிகையால் தொட்டு
ஒரு சன்னலை வரைந்தேன்
வரைந்த சன்னலின் வழியே
என் தேசத்தை கண்டேன்

இல்லாத பிள்ளைக்காக
செல்வம் சேர்க்கும் குடும்பம்!
இருக்கும் தாய் நோய்க்குமருந்தின்றி
தவிக்கும் குடும்பம்!

இத்தனை நிறங்களா மனிதர்களிலென
பாரதியின் கேள்வி கேட்டது!
வேற்றுமைக்கும்
வேற்றுமை காண்கிறது எந்நாடு

உன் ஓட்டுரிமை கொடு
நான் நாட்டுரிமை பெற்று
உன் வீட்டையாள்கிறேன்
என்கின்றன அரசியல் கட்சிகள்

சட்டையின்றி திரியும்
எனிந்திய குழந்தைக்கு
கொடியும் குண்டூசியும்
தருகிறான் அரசியல்வாதி

மக்கள் சுதந்திரமெல்லாம்
சுதந்திரமாய் போயிற்று
சுதந்திரம் என்ன விலை?
என்று கேட்கிறான் இந்தியன்

விழியில் வழியும்
கண்ணீர் காய்ந்து
விடுதலை விடியல்
எப்போது கிடைக்கும் என் இந்திய தாயே!?


தோழி


ஏய் பெண்ணே
என்னை என்ன
செய்துவிட்டாய்

ஏன் எனக்குள்
இத்தனை
மாற்றம்

தோழன்
என சிரிக்கிறாய்
உன் சிரிப்பும் எனை
சிறை வைக்கிறதே

கூட்டத்தில் இருந்தும்
தனியாய் உணர்கிறேன்
தனிமையும் உன் பெயரை
தான் தருகிறது


கனவிலும்
கவிதை வரைந்தவன்
இன்று காதல்
கண்ணாமூச்சி ஆடுகிறேன்

பாறையை இருந்த
என்னை இன்று
பறவையாய்
பட்டாம் பூச்சியாய்
பறக்க வைத்தாய்


காதலை
கேலிசெய்தவன் நான்
இன்று உன் கண்ணில்
கேள்வி இன்றி விழுந்தேன்

என் பகலெல்லாம்
பாதி விலைக்கு
விற்றேன்

இராப்பொழுதையும்
இரவல்
கொடுத்துவிட்டேன்

நினைவுகளை
இழுந்து
கனவுகளை காதலிக்குறேன்

சாவிலும்
உன்னுடன் இருக்க
விரும்புகிறேன்

எப்போது கிடைக்கும்
எனக்கு காதலநெனும்
பதவி உயர்வு?

காதல் கடிதம்

என் அன்பே நான்

உனை நினைத்திருக்கும்

வேளையில் உனக்காக

பிரத்யோகமாக ஒரு கவிதை

எழுத விரும்பினேன்

நான் கவிதை எழுத

கற்றுக்கொண்ட நாளிலிருந்து

கடைசிக் காலம் வரை

என்னுடய தொகுப்பில்

உனை பற்றி எழுதும் கவிதை

தான் சிறப்பானதாக இருக்க விரும்பினேன்

இதற்காய் நான்

இன்னும் கொஞ்சம் காலம்

பொறுத்திருக்கலாம் ஆனால்

எங்கே நான் மறித்து விடுவேனோ என்ற பயம்...

ஒரு வழியாக நான்

எழுத ஆரம்பித்து விட்டேன்

உனக்காக ஒரு கவிதையை

உன் கண்களை பற்றி

எழுத நினைத்தேன்

என் கண்கள் தானாக

மூடி கொண்டன

நீ வைக்கும்

ஒற்றை ரோஜாவும்

என் ரத்தத்தை வற்றி விடுகிறது

உன் சிரிப்பு

எனை சிறை

வைக்கும் போதே

உன் பார்வை

எனை பைத்தியமாக்குகிறது

உனது பெயரென்ன 'ந......'

நந்தவனமாய் நகர்கிறாய்

நதியாய் பாய்கிறாய்

என் நரம்புகளில்

உன்.........

ஐயோ போதும் பெண்ணே

இதற்க்கு மேல்

என்னால் முடியவில்லை

உன் முகத்திலேயே

நான் முழுவதுமாய்

கரைந்தேன்

மேலும் எழுத

எனக்கு இன்னும்

பல காலம் தேவை...

தனிமை


எந்தன் மனமே
என்னவாகியது உனக்கு
ஏன் இந்த வெறுமை
ஏன் இத்தனை மௌனம்

யாருக்காய் மௌனம் காக்கிறாய்
எதற்காய் வெறுமை அடைகிறாய்
எத்தனை எத்தனை வார்த்தைகள்
ஒருநொடியில் ஒரு நாளில்
இன்று ஒரு வார்த்தையும்
இல்லையே உன்னிடத்தில்
இதயம் கணத்து காண்பது ஏனோ

நான் சேர்த்துவைத்த
மயிலிரகெல்லாம்
ஒரு மழை வெள்ளத்துள்
அடித்து செள்ளப்பட்டதோர்
உணர்வு மனதுக்குள்
நண்பர்கள்
உனை அழவைக்க
முயற்சிக்கும் போதும்
சிரித்து கிடப்பாயே
இன்று யாரும்
எதுவும் செய்யாமல்
அழுகிறாய் ஏனோ
ஒ புரிந்துவிட்டது
தனிமை என்னும்
கொடிய மிருகம்
இப்போது உன்னுடன் சேர்ந்துவிட்டது
நீயும் அந்த மிருகமும்
இப்போது இருளில்
வாழ ஆரம்பித்துவிட்டீர்கள்
அதுதான் இந்த தனிமைக்கு காரணம்
ஏய் மனிதா !
நில் ஒருநிமிடம்
உனை வாசிப்பாய்
சில நிமிடம்
என்ன நடக்கிறது
இந்த பூமியில்
என்ன செய்கிறீர்கள் நீங்கள் ?
ஈரம் இல்லாத
உன்னுடன் வாழ
நான் விரும்பவில்லை
உன்னை விவாகரத்து
செய்கிறேன்
விழிகளை காப்பாற்ற ஏன்
முட்களை காவல் வைக்கிறீர்கள்
மனிதரென்ற மகிமையை
மறந்து வருவதேனோ
உன் பாரத தாயின் மைந்தர்கள்
மண்ணில் புதைக்கப்பட்டாலும்
நீ மனமிரங்குவதில்லை

உன்னடன் பிறந்தவன்
கையேந்தி யாசகம்
செய்யும் போதும் நீ
........

மனிதர்கள் வணங்க
சில விலங்குகள்
இங்கே இருந்தாலும்
விலங்குகள் வணங்க
ஒரு மனிதனும்
இங்கே இல்லை
மனித
சிறப்பெல்லாம்
இறப்பாகிறது...

இப்படிக்கு உன் மனசாட்சி

மழை


நீலவானத்தின் பன்னீர் நீ
கருமேகத்தின் கண்ணீர் நீ
உயிர்களின் செந்நீர் நீ
தாகம்தணிக்கும் தண்ணீரும் நீ

தாலாட்டிடும் தாயவள் நீ
தாகம்தீர்க்கும் தவமும் நீ
தாமரையின் தடாகம் நீ
தீயின் தீயவன் நீ

உயிரின் உயிரும் நீ
அணுவின் அணுவும் நீ
புல்வெளியின் புடவை நீ
பூஞ்சோலையின் புருஷன் நீ

நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அசையாது உலகு
வள்ளுவனின் வார்த்தை நீ
இசையின் இசையும் நீ

நீ எப்போது வருவாயென
காத்திருக்கிறோம் எதிர்பார்த்திருக்கிறோம்..!

புயல் காற்று

ஏன் எங்களை தீண்டினாய்
யார் உன்னை சீண்டியது
இசையின் ஒலியென நினைத்தேன்
இறைதேடும் பேயாய்மாறியது ஏனோ

பூக்களின் காதலி எனநினைத்தேன்
பூகம்பமாய் மாறியது ஏனோ
புல்லாங்குழலின் கவிதை நீ
பூமியை இசைக்கும்இசையும் நீ

பொறுமையாய் இருந்த பெண்
பொங்கி எழுந்தது ஏனோ
மண்ணை கிளர்வதாய் நினைத்து
மனதை தோண்டியது ஏனோ..?

கடத்தல்


என் காதலனே நீ
எங்கே இருக்கிறாயடா
உணன்பு முகம்
எனை உரிய வைக்கிறதே

பாவிகள் ஏனோ கடத்தினார்கள்
நீ வந்த விமானத்தை
பாக்தாக் நகருக்குள் பதுங்கிவிட்டதோ
பதில் சொல்லடா

யாருன்னை எங்கே
அடைத்து வைத்துள்ளார்கள்
அவன் முகம் நினைவிருக்கிறதா இல்லை
எந்தன் முகம் மட்டும் நினைவிருக்கிறதா

ஆகாயம் அவனேங்கேவென
எனை கேட்கும்போது
அழுகை மட்டுமே
எனை ஆட்கொள்கிறது

எனை கேட்பவரிடம்
உன் பெயரை ஊரை கூட
என்னால் சொல்ல
முடியவில்லை

இன்று என்ன நாள்
என்ன நேரம் வானிலை
எல்லாம் தெரியுமோ உனக்கு
இல்லை எனக்கு மட்டும் தான்.....

எத்தனை பேர் வந்தார்கள் இங்கே
எத்தனை முகங்கள்
என்னெதிரே உன்னை தவிர
உந்தன் முகமெங்கே எனக்குள்ளே தேடி பார்க்கிறேன்

எந்தன் அழுகை நதியே
எனை விடு என் காதலனை
சந்திக்க
நீ தேவையில்லை

எனை நான் இழந்தாலும்
உன் ஆன்மா
எனை காப்பாற்றுகிறது
கடவுளை போல

நம் இரவுகளெல்லாம்
பதிலில்லாமல் கழிகிறது
கனவெல்லாம் காற்றோடு
கரைகிறது

எனக்கு இப்போது வயதாகிவிட்டது
என் தந்தையை விட
அதிக அனுபவமே
உள்ளது என்னிடத்தில்

நினைவுகளை நிஜமாய்
நினைத்து
நினைத்து
நம் காலங்கள் கடக்கின்றன

உன்னை பற்றி
வந்த செய்திகள்
நம் வாழ்வின் நிஜங்கள்
நினைவுகளாய் உள்ளது

என்னிடம் இருந்த உன் ஒற்றை
புகைப்படமும் சிதைகிறது
சிதையும் புகைப்படத்துடன்
சிதைந்த என் உயிரும் கடத்தபடுகிறது...